கொரோனாவால் பாதிக்கபட்டவர் குணமடைந்தார் : விஜயபாஸ்கர் டுவீட் !

Webdunia
புதன், 25 மார்ச் 2020 (21:41 IST)
இந்தியா முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. நாடுமுழுவதும் சுமார் 519 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில், 10 பேர் பலியாகியுள்ளனர். 40 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று இரவு 8 மணிக்கு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி நள்ளிரவு முதல் ஊரடங்கு அமலுக்கு வரும் என அறிவித்தார். 

அதன் படி இன்று முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று 20-க்கும் மேற்பட்டோருக்கு உள்ளது உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கபட்டு சிகிச்சை பெற்று வந்த இருவர், முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பியதாக அம்மாநில  சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

அதேபோல், தமிழகத்தில் 2 வதாக கொரோனா தொற்று உறுதி செட்டப்பட்ட ஒருவர் குணமடைந்துவிட்டதாக அமைச்சர் விஜயபாஸ்கர் டுவிட்டர் பதிவு செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.500-க்கு எரிவாயு சிலிண்டர்! தேஜஸ்வி யாதவ் கொடுத்த அதிரடி வாக்குறுதி..!

திடீரென வைரலாகும் அண்ணாமலையில் வைரல் வீடியோ.. அப்படி என்ன செய்தார்?

காலையில் உயர்ந்த தங்கம், மாலையில் திடீர் சரிவு.. சென்னையில் இன்று மாலை நிலவரம்..!

முடிவுக்கு வந்ததா தொடர் ஏற்றம்? இன்று பங்குச்சந்தை சரிவு.. வர்த்தக முடிவில் நிப்டி நிலவரம்..!

மதுரை கள்ளழகர் கோயிலில் புதிய கட்டுமான பணிகள்.. மதுரை உயர்நீதிமன்ற கிளை முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments