சுகாதார பானமாக மாறும் கோமியம்; பாஜக அரசு திட்டம்

Webdunia
செவ்வாய், 6 பிப்ரவரி 2018 (18:43 IST)
உத்தரபிரதேசத்தில் யோகி தலைமையிலான பாஜக அரசு பசுமாட்டு கோமியத்தை சுகாதார பானமாக அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 
பெரும்பாலும் கோமியத்தை கிருமி நாசினியாக பயன்படுத்தி வருகிறார்கள். ஆயுர்வேத மருத்துவத்தில் கோமியம் மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் கோமியத்தை சுகாதார பானமாக அறிவிக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
இதுகுறித்து அரசு அதிகாரிகள் கூறியதாவது:-
 
பசுமாட்டு கோமியம் என்பது பல்வேறு ஆயுர்வேத குணநலன்கள் கொண்டது. எனவே, இந்த திட்டத்திற்கு மாநிலம் முழுவதும் வரவேற்பு எழுந்துள்ளது. தினமும் 10 முதல் 20 மி.லி கோமியத்தை குடித்து வந்தால் பல விதமான நோய்களை தடுக்கலாம் என்று கூறியுள்ளனர்.
 
மேலும் இதற்காக ஆயுர்வேத மருந்து தயாரிப்பு நிலையம் கோமியத்தை சுகாதார பானமாக தயாரிக்க முன்வந்துள்ளது. கோமியம் பாட்டிலில் விற்பனை தயார் செய்யப்பட்டு வருதகாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி இந்தியாவுக்கு கிடைத்திருப்பது இந்தியர்களின் அதிர்ஷ்டம்: புதின் புகழாரம்..!

ஒன்றல்ல.. இரண்டல்ல.. 550 இண்டிகோ விமானங்கள் ரத்து.. மன்னிப்பு கேட்டு அறிக்கை..!

டிட்வா புயல் கரையை கடந்த பின்னரும் மீண்டும் மழை.. சென்னை உள்பட 14 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.. !

பான் மசாலா பொருட்கள் மீது கூடுதல் செஸ் வரி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழக அரசின் உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டு மனுவில் கூறப்பட்டது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments