Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொரோனா 3வது அலை தாக்க 8 மாதம் டைம்: வெளியான கணிப்பு!

கொரோனா 3வது அலை தாக்க 8 மாதம் டைம்: வெளியான கணிப்பு!
, திங்கள், 28 ஜூன் 2021 (08:50 IST)
கொரோனா 3வது அலை இந்தியாவைத் தாக்க இன்னும் 8 மாதங்களாகும் என மத்திய அரசின் சிறப்பு குழு கணித்துள்ளது. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. 
 
இதனால் கொரோனா இரண்டாம் அலை விரைவில் முடிவுக்கு வரும் நம்பப்படுகிறது. முன்னதாக கொரோனா 2வது அலை ஜூலை மாதம் முடிவுக்கு வரும் எனவும் இதன் பின்னர் அக்டோபர் மாதம் 3வது அலை வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 
 
இதனைத்தொடர்ந்து டெல்டா பிளஸ் வைரஸ் தொற்று கொரோனா 3 ஆம் அலை உருவாக வழிவகுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், கொரோனா 3வது அலை இந்தியாவைத் தாக்க இன்னும் 8 மாதங்களாகும் என மத்திய அரசின் சிறப்பு குழு கணித்துள்ளது. மேலும், அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டால் கொரோனா 3 வது அலையால் பெரிய பாதிப்பு இருக்காது எனவும் கூறப்பட்டுள்ளது. 
 
ஏற்கனவே கொரோனா 3வது அலை வந்தால் அது இரண்டாம் அலையை போல மிகவும் மோசமானதாக இருக்காது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரி அறிவியலாளர்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சசிகலா மீண்டும் பொதுச்செயலாளராக வேண்டும்… அதிமுக கூட்டத்தில் தீர்மானம்!