Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சசிகலா மீண்டும் பொதுச்செயலாளராக வேண்டும்… அதிமுக கூட்டத்தில் தீர்மானம்!

சசிகலா மீண்டும் பொதுச்செயலாளராக வேண்டும்… அதிமுக கூட்டத்தில் தீர்மானம்!
, திங்கள், 28 ஜூன் 2021 (08:48 IST)
அதிமுகவினரின் கூட்டத்தில் சசிகலாவுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டு இருப்பது சர்ச்சைகளை உருவாக்கி வருகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்த நிலையில் எதிர்கட்சியாக உள்ளது. எனினும் அதிமுகவில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே உட்கட்சி பூசல் எழுந்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது. இதனால் கட்சி சிதறும் நிலை ஏற்பட்டுள்ளதாக பேசிக் கொள்ளப்படும் நிலையில் அரசியலில் இருந்து ஒதுங்கிய சசிகலாவை கட்சியை காப்பாற்ற வரவேண்டும் என தொண்டர்கள் சிலர் தொலைபேசியில் பேசி அழைப்பு விடுத்துள்ளனர். இது சம்மந்தமான ஆடியோக்கள் வெளியாகி சசிகலாவோடு பேசியவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர்.

ஆனாலும் சசிகலா அதிமுகவினர் உரையாடல் நடந்துகொண்டுதான் உள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நடந்த அதிமுக கூட்டத்தில் சசிகலா மீண்டும் கட்சியின் பொதுச்செயலாளராக வரவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இது கட்சித் தொண்டர்கள் மற்றும் அதிமுக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கூடுதல் தளர்வுகள் - தமிழ்நாட்டை இயல்பு நிலைக்கு திருப்பி விட்ட ஸ்டாலின்!