Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை: தன்னைத் தானே செருப்பால் அடித்துக் கொண்ட கவுன்சிலர்!

வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை: தன்னைத் தானே செருப்பால் அடித்துக் கொண்ட கவுன்சிலர்!
, செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023 (07:42 IST)
தேர்தலின் போது பொது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என  கவுன்சிலர் ஒருவர் பொதுமக்கள் முன்னிலையில் தன்னைத்தானே செருப்பால் அடித்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஆந்திர மாநிலம் அனகாபள்ளி என்ற மாவட்டத்தில் உள்ள நகராட்சி கவுன்சிலர் முலபர்த்தி ராமராஜ். இவர் தேர்தலில் போட்டியிடும்போது வாக்காளர்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். 
 
ஆனால் தன்னால் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என்று கூறி பொதுமக்கள் முன்னிலையில் தன்னைத்தானே செருப்பால் அடித்துக் கொண்டார் தான் பதவி ஏற்று 31 மாதங்கள் ஆகிவிட்டன என்றும் ஆனால் தனது வார்டில் உள்ள சாலைகள் மின்விளக்கு குடிநீர் உள்ளிட்ட பிரச்சனைகளை என்னால் தீர்க்க முடியவில்லை என்றும் அவர் ஏற்கனவே நகராட்சி கூட்டத்தில் தனது தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் திடீரென அவர் தனது வார்டுக்கு வந்து பொதுமக்கள் முன்னிலையில் தன்னைத் தானே செருப்பால் அடித்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஷ்வ இந்து பரிஷத் நடத்திய மத ஊர்வலத்தில் மோதல்; 2 காவலர்கள் உயிரிழப்பு!