Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஷ்வ இந்து பரிஷத் நடத்திய மத ஊர்வலத்தில் மோதல்; 2 காவலர்கள் உயிரிழப்பு!

விஷ்வ இந்து பரிஷத் நடத்திய மத ஊர்வலத்தில் மோதல்; 2 காவலர்கள் உயிரிழப்பு!
, செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023 (07:35 IST)
ஹரியானா மாநிலத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் நடத்திய மத ஊர்வலத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக இரண்டு காவலர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
ஹரியானா மாநிலத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் சமீபத்தில் மத ஊர்வலம் நடத்தினர். இந்த ஊர்வலத்தில் திடீரென வெடித்த வன்முறை காரணமாக ஊர்காவல் படையைச் சேர்ந்த இரண்டு காவலர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
அதுமட்டுமின்றி காவலர்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் இந்த வன்முறை சம்பவம் காரணமாக ஹரியானாவில் உள்ள ஏழு மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
மேலும் நூல் பரிதாபாத் ஆகிய மாவட்டங்களில் நாளை வரை இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.  இந்த நிலையில் ஹரியானா மாநிலத்தில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் படிப்படியாக அமைதி திரும்பி வருவதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே நாளில் 40 ரூபாய் குறைந்தது தக்காளி விலை.. பொதுமக்கள் நிம்மதி..!