Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 9152 ஆக உயர்வு: 308 பேர் பலி!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 9152 ஆக உயர்வு: 308 பேர் பலி!
, திங்கள், 13 ஏப்ரல் 2020 (08:26 IST)
இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளபோதும் பாதிப்பு எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8356 லிருந்து 9,152 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 273 லிருந்து 308 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 716 லிருந்து 857 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1985 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 1075 பேரும், டெல்லியில் 1154 பேரும், ராஜஸ்தானில் 804 பேரும், தெலுங்கானாவில் 524 பேரும், மத்திய பிரதேசத்தில் 532 பேரும், ஆந்திராவில் 427 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐரோப்பாவில் மட்டும் 75 ஆயிரம் பலி: உலகளவில் கொரோனா!