கொரோனா எதிரொலி: பிரதமர் மோடியை சந்திப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்!

Prasanth K
புதன், 11 ஜூன் 2025 (17:12 IST)

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடியை சந்திக்க செல்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

 

கொரோனா வைரஸ் மீண்டும் ஆசிய நாடுகளில் பரவத் தொடங்கியுள்ள நிலையில் இந்தியாவில் சுமார் 7 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது.

 

இந்நிலையில் இனி பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க செல்பவர்கள், முன்னதாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

 

இன்று டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை சிறப்பிக்கும் விதமாக டெல்லி முதலமைச்சர் மற்றும் பிரதிநிதிகளுக்கு பிரதமர் மோடியின் வீட்டில் விருந்து வழங்கப்படுகிறது. பிரதமரை சந்திக்க செல்லும் அனைவருக்கும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா சீட்டுக்காக அதிமுக கூட்டணியா?!.. பிரேமலதா விளக்கம்!...

பாஜகவால் என்னை தோற்கடிக்க முடியாது.. சவால் விடுத்த மம்தா பானர்ஜி..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் செம்மொழி பூங்கா திறப்பு விழாவா? அண்ணாமலை கண்டனம்..!

சீன பாஸ்போர்ட் கேட்டு அருணாச்சல பிரதேச பெண்ணை துன்புறுத்தவில்லை: சீனா மறுப்பு..!

என்னை வங்காளத்தில் குறிவைத்தால் மொத்த தேசத்தையும் குலுங்க வைப்பேன்: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments