Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடுபட்டவர்களுக்கு ரூ.1000 மகளிர் உதவித்தொகை .. துணை முதல்வர் உதயநிதி முக்கிய அறிவிப்பு..!

Mahendran
புதன், 11 ஜூன் 2025 (15:39 IST)
தமிழக அரசு தகுதி வாய்ந்த மகளிர்களுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கி வரும் நிலையில், இதில் விடுபட்டவர்களுக்கு விரைவில் மகளிர் உதவித்தொகை வழங்கப்படும் என தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
விடுபட்ட மகளிர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்த வகையில், அதற்கான முதல் கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 
"விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும், மகளிர் உதவித்தொகை தரும் தேதியும் அறிவிக்கப்படும் என்றும்," அவர் தெரிவித்தார். "சென்ற முறை எப்படி சரியாக மகளிர் உதவித்தொகை வழங்கப்பட்டதோ, அதேபோல் இந்த முறையும் விடுபட்டவர்களுக்கு நிச்சயமாக மகளிர் உதவித்தொகை வழங்கப்படும் என்றும்," அவர் உறுதியளித்தார்.
 
இதனால், விடுபட்ட மகளிர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்னும் ஒரு சில வாரங்களில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுமண தம்பதிகளை ரொம்ப தூரத்திற்கு தேனிலவுக்கு அனுப்பாதீர்கள்: மத்திய பிரதேச முதல்வர்..!

விஜய் எங்க வீட்டுப் பையன்.. கூட்டணி பற்றி அவர்தான் சொல்லணும்! - பிரேமலதா பிடிக்கும் புது ரூட்?

கொஞ்சம் ஓவரா பேசிட்டேன்.. மன்னிச்சிடு நண்பா! - ட்ரம்பிடம் மன்னிப்பு கேட்ட எலான் மஸ்க்!

திமுக எடுத்த ரகசிய சர்வே.. 2026 தேர்தல் முடிவு இந்த மூன்றில் ஒன்றுதான்: பத்திரிகையாளர் மணி

அதிமுக - பாஜக கூட்டணிக்கு வருகிறதா மதிமுக? நயினார் நாகேந்திரன் பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments