Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

28 லட்சத்தை தாண்டிய பாதிப்புகள்; நலம் பெறுவதால் நம்பிக்கையில் இந்தியா!

28 லட்சத்தை தாண்டிய பாதிப்புகள்; நலம் பெறுவதால் நம்பிக்கையில் இந்தியா!
, புதன், 12 ஆகஸ்ட் 2020 (11:37 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் 28 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கொரோனா பாதிப்புகளின் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும் முன்பை விட பாதிப்புகள் தற்போது அதிகமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 60,963 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே நாளில் 834 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் மொத்தமாக கொரோனா பாதிப்பு 23,29,639 ஆக உயர்ந்துள்ளது. இதில் 16,39,600 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 6,43,948 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்த உயிரிழப்பு 46,091 ஆக உள்ளது. கடந்த சில நாட்களாக நாளொன்றுக்கு இறப்பு வீதம் ஆயிரத்திற்கும் மேல் இருந்த நிலையில் தற்போது குறைய தொடங்கியுள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சரசரவென சரிந்த தங்கம் விலை! – கொண்டாட்டத்தில் மக்கள்!