Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அரண்மனை 3 படப்பிடிப்பில் சிக்கல் -மீண்டும் சுந்தர் சி இயக்கத்தில் ஜெய்!

அரண்மனை 3 படப்பிடிப்பில் சிக்கல் -மீண்டும் சுந்தர் சி இயக்கத்தில் ஜெய்!
, புதன், 12 ஆகஸ்ட் 2020 (10:26 IST)
சுந்தர் சி இயக்கி நடிக்கும் புதிய படத்தில் ஜெய் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இயக்குனர் சுந்தர் சி வரிசையாக படங்களை இயக்கி வருகிறார். கொரோனா லாக்டவுனுக்கு முன்பாக அவர் இயக்கிய ஆக்‌ஷன் படம் வெளியானது. அதையடுத்து சூட்டோடு சூடாக வட இந்தியாவில் அரண்மனை 3 படத்தை இயக்கி வந்தார். கொரோனாவால் இப்போது அதன் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்போது புதிதாக தான் இயக்கி நடிக்கும் படத்துக்காக மற்றொரு நாயகனாக ஜெய்யை ஒப்பந்தம் செய்துள்ளார். இவர்கள் இருவரும் ஏற்கனவே கலகலப்பு 2 படத்தில் இணைந்து பணிபுரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அரண்மனை 3 படப்பிடிப்பு நடத்துவது இப்பொது சிரமம் என்பதால் இந்த படத்தை குறுகிய கால படமாக இயக்க சுந்தர் சி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனாவால் விஷால் உடலில் ஏற்பட்ட மாற்றம் – பழைய நிலைக்கு திரும்ப தீவிர வொர்க் அவ்ட்!