Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாள் ஒன்றுக்கு 12 ஆயிரத்திற்கும் அதிகமான பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா!

நாள் ஒன்றுக்கு 12 ஆயிரத்திற்கும் அதிகமான பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா!
, செவ்வாய், 12 ஜனவரி 2021 (09:50 IST)
உலக நாடுகள் முழுவதும் கொரோனா பாதிப்புகள் உள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்ற நாடுகளை விட வேகமாக குணமாகி வருகிறது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக ஒரு நாள் பாதிப்பு 50 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 12,584 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 1,04,79,179 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 167 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  1,51,327 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,01,11,294 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 2,16,558 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

10, 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கும் தேதி: முதல்வர் அறிவிப்பு