டெல்லியில் தினசரி கொரோனா பாதிப்புகள் உயர்வு..

Webdunia
வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (18:53 IST)
கடந்த 2020 ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்குக் கொரொனா தொற்றுப் பரவியது. இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், முதல் 2 அலைகள் முடிந்து, தற்போது 3 வது அலை நடந்து வருகிறது.

விரைவில் கொரொனா 4 வது அலைக்கு வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில், சமீப காலமாக நாட்டில் கொரொனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், தலை நகர் டெல்லியில் கொரானாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கடந்த  6 மாதத்தில் இல்லாத வகையில், தற்போது தினசரி பாதிப்பு 2 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் 2,073 பேர் பாதிகப்பட்டுள்ளனர்.

டெல்லியில் கொரரொனாவல் பாதிக்கப்பட்டுவர்களின் எண்ணிக்கை மொத்தம் 4 கோடியே 40 லட்சத்து 87 ஆயிரத்து 37 பேராக உயர்ந்துள்ளது.

கொரோனாவில் இருந்து சுமார் 4,34, 24 029 பேர் குணமடைந்துள்ளனர்.

டெல்லியில் கொரொனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆகும். இதுவரை 5,26,530 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments