Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மைசூர் வந்தார் சோனியா காந்தி: ராகுல் நடைப்பயணத்தில் இணைகிறார்!

sonia gandhi
, திங்கள், 3 அக்டோபர் 2022 (18:31 IST)
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கடந்த சில நாட்களாக இந்திய ஒற்றுமை என்ற நடைப்பயணத்தை நடத்தி வரும் நிலையில் இந்த நடைபயணத்தில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மைசூர் வந்துள்ளார். 
 
தமிழகத்தின் கன்னியாகுமரியில் ஆரம்பித்த ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் கேரளாவில் முடித்துவிட்டு அதன் பின் தற்போது கர்நாடகாவில் நடந்து வருகிறது 
 
இந்த நிலையில் ராகுலின் நடைபயணத்தில் சோனியா காந்தி கலந்து கொள்வார் என ஏற்கனவே தகவல்கள் வெளிவந்தன.  இந்த நிலையில் சற்று முன் அவர் மைசூர் வந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது
 
இந்த நிலையில் நாளை ராகுல் காந்தியின் நடைபயணத்தில் சோனியா காந்தி கலந்து கொள்ள இருப்பதாக காங்கிரஸ் கர்நாடக மாநில தலைவர் சிவக்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புதுச்சேரியில் மின்வாரிய ஊழியர்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ்!