Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எங்கள் குடும்பத்தில் இருந்து யாரும் போட்டியிடப்போவதில்லை: ராகுல்காந்தி உறுதி

Rahul Gandhi
, வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (13:31 IST)
எங்கள் குடும்பத்தில் இருந்து யாரும் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடவில்லை என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி திட்டவட்டமாக கூறியுள்ளார். 
 
காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் 22 ஆண்டுகள் கழித்து வரும் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் நாளை முதல் மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த நிலையில் ஒற்றுமை பாதயாத்திரையை ஒத்திவைத்து விட்டு திடீரென ராகுல்காந்தி டெல்லி சென்றதால் அவர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது
 
ஆனால் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி எங்கள் குடும்பத்தில் இருந்து யாரும் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடவில்லை என்று தெரிவித்துள்ளார் 
இதனை அடுத்து அசோக் கெலாட், சசிதரூர் உள்ளிட்டோர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று தேசிய சினிமா தினம்.. விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்! – மகிழ்ச்சியில் பட நிறுவனங்கள்!