மகனுடன் இணைந்து ஆக்சிஜன் வங்கியை தொடங்கிய பிரபல நடிகர்

Webdunia
வியாழன், 27 மே 2021 (06:11 IST)
மகனுடன் இணைந்து ஆக்சிஜன் வங்கியை தொடங்கிய பிரபல நடிகர்
பிரபல தெலுங்கு நடிகர் தனது மகனுடன் இணைந்து ஆக்சிஜன் வங்கி ஒன்றை தொடங்கியுள்ளார்
 
தெலுங்கு திரையுலகில் மெகா ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் சிரஞ்சீவி குறித்து அனைவரும் அறிந்ததே. அவர் இப்போது ‘ஆச்சார்யா’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் அந்த படத்தை அவரது மகன் ராம் சரண் தேஜா தயாரித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்து வருகிறது. இதனையடுத்து நடிகர் சிரஞ்சீவி ஆக்சிஜன் வங்கி ஒன்றை தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் தொடங்கியுள்ளார் 
 
சிரஞ்சீவி மற்றும் அவரது மகன் ராம் சரண் தேஜா ஆகிய இருவரும் இணைந்து தொடங்கியுள்ள இந்த ஆக்சிஜன் வங்கியில் ஆக்சிஜன் தேவைப்படுபவர்கள் நேரடியாக வந்து பெற்றுக்கொள்ளலாம் என்று சிரஞ்சீவி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து சிரஞ்சீவிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. தமிழக அரசு மேல்முறையீட்டு மனு நிராகரிப்பு..

தீபத்திருநாள் வாழ்த்து கூறிய போஸ்டை திடீரென நீக்கிய செங்கோட்டையன்.. மீண்டும் பதிவு செய்ததால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments