ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி சாம்பியன் பட்டம் பெற்ற நிலையில், அதற்கான விழா கொண்டாடப்பட்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 11 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இந்த விழாவிற்கு வந்த ஆர்சிபி ரசிகர்கள் பலர் அநாகரீகமாக நடந்து கொண்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வந்த ஆம்புலன்ஸுக்கு கூட ஆர்.சி.பி. ரசிகர்கள் வழிவிடவில்லை என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் வீடியோவில், ஆர்சிபி ரசிகர்கள் மெட்ரோவில் டிக்கெட் எடுக்காமல், டிக்கெட் செக் செய்யும் இடத்தில் தாவி குதித்துப் போகும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இந்த வீடியோவை பார்த்த பல நெட்டிசன்கள், "நாகரிகம் இல்லாதவர்கள்", "அறிவில்லாதவர்கள்" என்று கடுமையாக விமர்சனம் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.