Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த செடிய பாத்து பயிரை சொல்லிட்டா ராஜினாமா பண்றேன்! – ராகுலுக்கு சவால் விடுத்த அமைச்சர்!

Webdunia
திங்கள், 12 அக்டோபர் 2020 (11:23 IST)
மத்திய அரசின் விவசாய மசோதாக்களுக்கு எதிராக தொடர்ந்து பேசி வரும் ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் விடுத்துள்ள சவால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசால் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் பல இடங்களில் பெரும் போராட்டம் நடத்தி வருகின்றன. ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பல இடங்களுக்கு பயணம் மேற்கொண்டு இதுகுறித்து உரையாற்றி வருகின்றனர். இந்நிலையில் அவர்களது போராட்டங்கள் குறித்து மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களை ராகுல் மற்றும் பிரியங்கா தவறாக வழிநடத்துவதாக கூறியுள்ள அவர் “ராகுலால் சாதாரண ஆடு மற்றும் செம்மறி ஆடுகளையே வேறுபடுத்தி பார்க்க தெரியாது. இருவரும் விவசாய நிலங்களில் உள்ள செடிகளை வைத்து அது என்ன பயிர் என கூறிவிட்டால் எனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலை விட்டு விலகி விடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments