Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய குற்றவியல் சட்டம் இப்போது இல்லை: மத்திய அரசின் அறிவிப்பால் போராட்டம் வாபஸ்?

Webdunia
புதன், 3 ஜனவரி 2024 (07:16 IST)
புதிய குற்றவியல் சட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்ததன் காரணமாக லாரி டிரைவர்கள் திடீரென போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
 
வடமாநிலங்களில் பல இடங்களில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் மத்திய அரசு தற்போது இது குறித்து விளக்கம் அளித்துள்ளது. 
 
மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா என்பவர் இது குறித்து கூறிய போது புதிய குற்றவியல் சட்டம் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசித்த பின்னரே இந்த சட்டம் அமல்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.  
 
மத்திய அரசு இந்த அறிவிப்பை அடுத்து லாரி ஓட்டுனர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாகவும் மத்திய அரசுடன் நடத்திய பேச்சு வார்த்தைகள் உடன்பாடு எட்டப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து மீண்டும் நாடு முழுவதும் இயல்பு நிலை திரும்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய 200 கிலோ சத்து மாத்திரை வாய்க்காலில்.. அதிர்ச்சி சம்பவம்..!

iOS 26 ஐ அறிவித்தது ஆப்பிள் நிறுவனம்! ஆனால் இந்த மாடல்களில் மட்டும்தான் வொர்க் ஆகுமாம்! - புது சிறப்பம்சங்கள் என்ன?

விஜய் மல்லையாவுக்கு இன்னும் ரூ.7000 கோடி கடன் உள்ளது. இந்திய வங்கிகள் அறிவிப்பு..!

சிங்கப்பூர் கப்பல் விபத்து.. உயிருக்கு போராடியவர்களை மீட்ட இந்திய கப்பல் படை.. நன்றி தெரிவித்த தூதரகம்..!

நேற்றைய ஏற்றத்திற்கு பின் இன்று பங்குச்சந்தை நிலவரம் என்ன? சென்செக்ஸ் 83000 செல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments