Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உணவுப்பொருட்களை பதுக்கினால் நேரடியாக சிறைதான்! – எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு!

Webdunia
புதன், 8 ஏப்ரல் 2020 (12:46 IST)
ஊரடங்கு உத்தரவை சாக்காக கொண்டு உணவுப்பொருட்களை பதுக்கினால் சிறை தண்டனை வழங்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். அத்தியாவசிய பொருட்கள் விற்பதற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் மட்டும் வாங்க கடைகளுக்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் சில இடங்களில் அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைப்பதாகவும், அதிக விலைக்கு விற்பதாகவும் மத்திய அரசுக்கு தகவல் வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து உடனடி நடவடிக்கை எடுத்துள்ள மத்திய அரசு மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அதன்படி மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அன்றாடம் கிடைப்பதை உறுதிப்படுத்த மாநில அரசுகளுக்கு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தடை உத்தரவை பயன்படுத்தி அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் துயரம்.. காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்த தகவல்கள் என்னென்ன?

கரூர் துயர சம்பவம்: ஐ.ஜி. தலைமையில் சிறப்புக் குழு விசாரணை

விஜய் பிரச்சாரத்தில் சதி நடந்திருக்கிறது.. நீதிமன்றத்தை நாடிய தவெக! - நாளை விசாரணை!

இதெல்லாம் சந்தேகத்த கிளப்புது...' கரூர் பிரச்சார கூட்ட சம்பவம் குறித்து ஈபிஎஸ் கேள்வி...!

கூட்டத்திற்கு விஜய் சரியான நேரத்திற்கு வர வேண்டும்.. துணை முதல்வர் உதயநிதி அறிவுரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments