Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வைகோ கேட்பதற்காக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாகுமா?

வைகோ கேட்பதற்காக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாகுமா?
, புதன், 8 ஏப்ரல் 2020 (10:55 IST)
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாகுமா என்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார். 

 
கொரோனா காரணமாக தமிழகத்தில் அனைத்து தொழில்களும், தொழிலாளர்களும் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். கல்வி நிலையங்களுக்கு அரசு விடுமுறை அளித்துள்ளது. இதனால் தேர்வு நடத்த முடியாத சூழ்நிலை உருவானதால் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது. 
 
இந்நிலையில் இன்னும் நடத்து முடிக்கப்படாமல் இருக்கும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்குமா என கேள்வி எழுந்துள்ளது. நேற்று வைகோ பொதுத்தேர்வை ரத்து செய்யும் படி அறிவுறுத்தி இருந்தார். இந்நிலையில் இது குறித்து பதில் அளித்துள்ளார் அமைச்சர் செங்கோட்டையன், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை வைகோ ரத்துசெய்யக் கோரியது தொடர்பாக முதல்வர்தான் முடிவு செய்ய வேண்டும் என கூறியுள்ளார். 
 
இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னரே, சூழ்நிலையை பொறுத்தே 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து முடிவெடுக்க முடியும் என தெரிவித்தார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

14 மாதக் குழந்தை கொரோனாவல் பலி! அதிர்ச்சியளிக்கும் செய்தி!