Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணமான 5 நாட்களில் மணமகள் மாயம்! நகை, பணம் திருடி சென்றதால் அதிர்ச்சி..!

Mahendran
வியாழன், 6 மார்ச் 2025 (11:44 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில், திருமணம் ஆன ஐந்தே நாட்களில் மணமகள் திடீரென மாயமாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மேலும் கணவர் வீட்டிலிருந்து ரூ.3.5 லட்சம் பணம் மற்றும் நகைகளை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.
 
உத்தரபிரதேச மாநிலம் ஹோண்டா என்ற பகுதியில், ஐந்து நாட்களுக்கு முன்பு பெற்றோர்கள் தங்கள் மகனுக்கு மணமகளை பார்த்து திருமணம் செய்து வைத்தனர். இந்த திருமணம் சிறப்பாக நடைபெற்ற நிலையில், புதிய ஜோடி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்ததாக தெரிகிறது.
 
இந்நிலையில், நேற்று இரவு மணமகள் மாயமாகிவிட்டார். அது மட்டுமின்றி, கணவர் வீட்டிலிருந்த பணமும் நகைகளும் திருடி சென்றுள்ளார். மேலும், இரவு நேரத்தில் மாமியார் மற்றும் மாமனாருக்கு தேநீர் கொடுத்து தூங்க வைத்ததாகவும், அதன் பிறகு பணம் மற்றும் நகைகளை எடுத்து விட்டு தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
 
தேநீரில் தூக்க மருந்து கலந்திருக்கலாம் என்ற சந்தேகத்துடன், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான சில நாட்களிலேயே மணமகள் கணவர் வீட்டிலிருந்து திருடிச் சென்று மாயமான சம்பவம், அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Farewell மேடையில் பேசும்போது மாரடைப்பு! 20 வயது பெண் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அந்த தியாகி யார்? உங்களால் ஏமாற்றப்பட்ட ஓபிஎஸ்ஸும், தினகரனும்தான்! - எடப்பாடியாருக்கு அமைச்சர் பதில்!

அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்.. பதவி விலக வலியுறுத்தி முழக்கம்..!

சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை..!

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

அடுத்த கட்டுரையில்
Show comments