ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் பாஜக பிரமுகரான ரோஹித் சைனி, தனது மனைவி சஞ்சுவை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். இக்கொலைக்கு அவரது காதலியான ரித்து சைனி உடந்தையாக இருந்ததால், அவரும் கைது செய்யப்பட்டார்.
ஆகஸ்ட் 10 அன்று சஞ்சு சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. முதலில், அடையாளம் தெரியாத கொள்ளையர்கள் தனது மனைவியை கொன்று, நகைகளுடன் தப்பி சென்றுவிட்டதாக ரோஹித் சைனி காவல்துறையிடம் தெரிவித்திருந்தார். ஆனால், விசாரணையின்போது அவரது வாக்குமூலங்களில் முரண்பாடுகள் இருந்ததால், காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது, ரோஹித் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
ரோஹித், தனது காதலியின் தூண்டுதலின் பேரில் தனது மனைவியை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். ரோஹித் மற்றும் ரித்து ஆகிய இருவரும் நீண்டகாலமாக உறவில் இருந்ததும், சஞ்சு அவர்களது உறவுக்கு தடையாக இருந்ததும் தெரியவந்தது. சஞ்சுவை கொலை செய்ய வேண்டும்" என்று ரித்து வற்புறுத்தியதால், ரோஹித் இந்த கொடூரக் குற்றத்தை செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.