Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெங்களூரில் கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழப்பா? அதிர்ச்சி தகவல்..!

Advertiesment
பெங்களூர்

Siva

, ஞாயிறு, 25 மே 2025 (09:45 IST)
பெங்களூருவில் 84 வயதுடைய ஒருவர் கொரோனா காரணமாக உயிரிழந்தார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. ஆனால் இதனை மருத்துவ வட்டாரங்கள் முற்றிலும் மறுத்துள்ளன.
 
மருத்துவமனையிலிருந்து கிடைத்த தகவலின்படி, உடல்நலக் குறைவால் மே 13ஆம் தேதி அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு நுரையீரல் செயலிழப்பு உள்ளிட்ட பல உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டிருந்தன. மே 17ஆம் தேதி செய்யப்பட்ட பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
 
இதையடுத்து சிலர், கொரோனா தான் அவரது மரணத்துக்குக் காரணம்" என கூறினர். ஆனால் மருத்துவர்கள்  இதுகுறித்து கூறியபோது,’  முன்னே சில சிக்கலான உடல்நிலை மற்றும் முக்கிய உறுப்புகள் செயலிழப்பு தான் மரணத்துக்குக் காரணம் என்றும், கொரோனா மரணத்தில் நேரடி காரணமாக இல்லை என்றும் உறுதியாக சொல்கிறார்கள்.
 
மீண்டும் சில பகுதிகளில் கொரோனா பரவும் நிலையில் உள்ளதால், இந்த விவகாரம் சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியதாகவும், உண்மை நிலையை மக்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்றும் மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோவை, நீலகிரியில் அதிகனமழைக்கான ரெட் அலெர்ட்! சுற்றுலா தளங்கள் மூடல்!