சிங்கப்பூர் கப்பல் வெடித்து சிதறினால் கேரளாவுக்கு ஆபத்தா? அதிர்ச்சி தகவல்..!
, புதன், 11 ஜூன் 2025 (17:38 IST)
சிங்கப்பூர் கப்பல் நடுக்கடலில் சென்று கொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்து எரிந்த நிலையில், தற்போது தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருப்பதாகவும், தீ கண்டெய்னர்களுக்கு பரவியதால் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
கப்பலில் இருந்த கேப்டன் உள்பட 22 பேர் உயிர் தப்பிக்க கடலில் குதித்த நிலையில், அவர்களில் 18 பேரை இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த நிலையில், தீப்பிடித்து எரியும் சிங்கப்பூர் கப்பல் முழுவதுமாக வெடித்து சிதறும் அபாயம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும் கப்பலில் குளோரோஃபார்மேட், டைமெத்தில் சல்பேட் போன்ற ரசாயன மற்றும் வேதிப்பொருட்கள் உள்ளதால், அந்தக் கப்பல் வெடித்து சிதறினால் கேரள கடற்கரை பகுதியில் மீன்பிடித்தலும், சுற்றுச்சூழலும் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. எனவே, கேரளா மக்கள் அச்சத்துடன் இருப்பதாகத் தெரிகிறது.
அடுத்த கட்டுரையில்