Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குவாட்டர் மதுபான உற்பத்தி நிறுத்தப்படும்.. மது தயாரிப்பு நிறுவனங்கள் அறிவிப்பால் பரபரப்பு..!

Advertiesment
கேரளா

Siva

, வெள்ளி, 6 ஜூன் 2025 (07:57 IST)
கேரளாவில் 300 மில்லி மீட்டருக்கு குறைவான கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் பாட்டில் உற்பத்திக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, இந்த தடை அமலுக்கு வந்தால் குவாட்டர் மதுபான உற்பத்தி நிறுத்தப்படும் என மது தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
குவாட்டர் மதுபானம் மூலம் மட்டும் கேரளா அரசுக்கு ஆண்டுக்கு 650 கோடி ரூபாய் வருவாய் கிடைப்பதாக கூறப்பட்டுள்ள நிலையில், கேரள அரசு இப்படி ஒரு முடிவு எடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
பிளாஸ்டிக் பாட்டில் உற்பத்தியை குறைக்கும் வகையில், கேரள அரசு 300 மில்லி மீட்டருக்கு குறைவான கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் உற்பத்திக்கு தடை விதித்துள்ளது. சுற்றுச்சூழல் மேம்பாட்டு காரணமாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தடையால் மதுபான உற்பத்தி நிறுவனங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன.
 
இந்த தடை அமலுக்கு வந்தால் குவாட்டர் மதுபான உற்பத்தி நிறுத்தப்படும் என்று மதுபான தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்துள்ள நிலையில், இந்த விஷயத்தில் கேரளா அரசு தனது உத்தரவை திரும்ப பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
 
குவாட்டர் மது பாட்டில் உற்பத்தி நிறுத்தப்பட்டால், மது கடைகளில் குவாட்டர் மதுபானம் விற்பனையும் நிறுத்தப்படும். இதனால், ‘ஆப்’ அல்லது ‘ஃபுல்’ மட்டுமே வாங்க வேண்டிய நிலை மது குடிப்பவர்களுக்கு ஏற்படும் என்பதால், பெரும் குழப்பம் ஏற்படும் என்று கூறப்பட்டு வருகிறது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முக்கிய காவல் அதிகாரிகள் சஸ்பெண்ட்.. ஜெயலலிதாவை ஜெயிலுக்கு அனுப்பிய நீதிபதி தலைமையில் ஆணையம்..