Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்களூரை புரட்டி போட்ட மழை! – புல்டோசரில் பயணிக்கும் மக்கள்!

Webdunia
திங்கள், 5 செப்டம்பர் 2022 (10:56 IST)
கடந்த சில காலமாகவே கர்நாடகா உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் பெங்களூரில் நேற்று மிக கனமழை பெய்துள்ளது.

தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களாக பல பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

பெங்களூரிலும் கனமழை காரணமாக பல பகுதிகளும் வெள்ளக்காடாகி உள்ளது. பிரதான சுரங்க பாதைகளில் நீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று பெங்களூரில் அதிகனமழை வெளுத்து வாங்கியுள்ளது. விடாமல் பெய்த மழையால் குடியிருப்பு பகுதிகளே வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

குடியிருப்பு பகுதிகளில் குட்டி அணை கட்டியது போல சுவற்று துவாரங்கள் வழியே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் புல்டோசர்களில் ஏறி நீரோட்டத்தை கடந்து வருகின்றனர். பெங்களூர் வெள்ளம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments