Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெங்களூரு அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: இருவர் பலி

பெங்களூரு அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: இருவர் பலி
, செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (20:40 IST)
பெங்களூரு அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: இருவர் பலி
பெங்களூரு அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் பலியானதாகவும் பலியான இருவரும் பெண்கள் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
பெங்களூரில் உள்ள பன்னார்கட்டா என்ற சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இந்த குடியிருப்பில் திடீரென இன்று மாலை தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டபோது காற்று பலமாக வீசியதால் தீ பரவியது. இந்த தீ விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இரண்டாவது மாடியில் பால்கனியில் நெருப்பில் சிக்கிய பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் அதே வீட்டிற்குள் மேலும் ஒரு பெண் உடல் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அந்தப் பெண்ணின் அடையாளம் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடப்பு கல்வியாண்டில் தேர்வுக் கட்டணம் கிடையாது: சி.பி.எஸ்.சி அறிவிப்பு