Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் இருக்கையில் பாலகிருஷ்ணா - ஆந்திராவில் சர்ச்சை

Webdunia
வியாழன், 25 ஜனவரி 2018 (14:17 IST)
ஆந்திர நடிகர் பாலகிருஷ்ணா முதல்வர் சந்திரபாபு நாயுடு இருக்கையில் அமர்ந்து அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட விவகாரம் ஆந்திர மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரின் மைத்துனரும் நடிகருமான பாலகிருஷ்ணா இந்துபூர் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.
 
இந்நிலையில், இந்துபூரில் வருகிற மார்ச் மாதம் நடைபெறவுள்ள லேபக்ஷி உற்சவ நிகழ்ச்சி தொடர்பாக விஜயவாடாவில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் பாலகிருஷ்ணா அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். எம்.எல்.ஏக்கள் ஆலோசனை நடத்த வேறு அறை இருந்தாலும், அவர் முதல்வர் அறையில், அதுவும் முதல்வர் இருக்கையில் அமர்ந்து அதிகாரிகளுன் ஆலோசனை செய்தார்.

 
இது அங்கிருந்த அதிகாரிகளுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகப்பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வெளிநாடு சென்றுள்ள நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
இந்த விவகாரம் ஆந்திர அரசியல் கட்சியினருக்கிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதுகாப்பு படையினரின் என்கவுண்டர்.. 31 நக்சல்கள் பலி.. சத்தீஸ்கரில் பரபரப்பு..!

PM SHRI திட்டத்தில் இணைய மறுத்ததால் தமிழ்நாட்டிற்கு நிதி தரவில்லை: முதல்வர் ஸ்டாலின்

டெல்லியை அடுத்து மேற்கு வங்கத்திலும் பாஜக அரசு.. சுவேந்து அதிகாரி நம்பிக்கை..!

டெல்லி முதல்வர் அதிஷி ராஜினாமா.. புதிய ஆட்சி பதவியேற்பது எப்போது?

உண்மையான பதில் வரும்வரை கேள்விகள் தொடரும்.. திமுக அரசை சரமாரியாக விமர்சனம் செய்த அண்ணாமலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments