Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாலியல் தொழிலாளர்களிடம் செல்லும் ஆண்களும் கடும் தண்டனை: ஆந்திராவில் சட்ட திருத்தம்!

பாலியல் தொழிலாளர்களிடம் செல்லும் ஆண்களும் கடும் தண்டனை: ஆந்திராவில் சட்ட திருத்தம்!
, புதன், 17 ஜனவரி 2018 (21:53 IST)
பாலியல் தொழிலாளர்களிடம் செல்லும் ஆண்களுக்குத் தண்டனை அளிக்கும் சட்டம் திருத்தங்களை முன்மொழியும் இந்தியாவின் முதல் மாநிலம் ஆந்திரா.  
 
இளம் பெண்கள் கடத்தப்பட்டு விபசாரத்தில் ஈடுபடுத்தப்படும் பிரச்சனை ஆந்திராவில் அதிகமாக உள்ளது. பாலியல் தொழிலாளர்களிடம் செல்லும் ஆண்களுக்குத் தண்டனை அளிக்கப்பட்டால், இந்த பிரச்சனையின் தீவிரம் குறையலாம். ஆந்திர அரசும் இதையே எண்ணுகிறது.
 
பெண்கள் கடத்தலை தடுக்கும்விதமாக, பாலியல் தொழிலாளர்களிடம் செல்லும் ஆண்களும் தண்டனை அளிக்க ஆந்திர அரசு தயாராகிவருகிறது. மனித கடத்தலை தடுக்கவும், பொருத்தமான சட்ட திருத்தங்கள் ஏற்படுத்தவும் ஒரு ஆலோசனை குழவை அமைக்க ஆந்திர அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இக்குழு இரண்டு மாதங்களில் அரசிடம் அறிக்கையை அளிக்கும்.
 
மற்ற எந்த மாநிலங்களும் இதுபோன்ற சட்ட நடவடிக்கையை கொண்டுவர முயற்சிக்காத நிலையில், ஆந்திரா மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் என்று தெரிகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஆந்திரா அரசு அமைத்த குழு ஆய்வு செய்து, ஆந்திராவுக்கு ஏற்ற திட்டத்தை வடிவமைக்கும். இறுதி அறிக்கையை பார்த்த பின்னர் அரசு முடிவெடுக்கும் என தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நான் அப்படி கூறவே இல்லை : திவாகரன் அந்தர் பல்டி