3 குழந்தைகள் உள்பட 7 பேர் கொலை.. பெண்ணுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்..!

Siva
வெள்ளி, 8 ஆகஸ்ட் 2025 (17:32 IST)
மூன்று குழந்தைகள் உட்பட ஏழு உறவினர்களை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட பெண் ஒருவருக்கு பம்பாய் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
 
கடந்த 2023-ஆம் ஆண்டு புனேவில் உள்ள பீமா ஆற்றில் ஏழு உடல்கள் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன. இந்த கொலைகளுக்கு காந்தாபாய் ஜாதவ் என்ற பெண் தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 
 
இந்த நிலையில், அவருக்கு எதிரான நேரடி ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும், சூழ்நிலை ஆதாரங்களும் அவரை நேரடியாக குற்றத்துடன் தொடர்புபடுத்தவில்லை என்றும் கூறி பம்பாய் உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.
 
குற்றவாளிக்கு எதிராகப் போதுமான ஆதாரங்கள் இல்லாததால், அவரை காலவரையின்றி தடுப்புக் காவலில் வைக்க முடியாது என்றும், மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு பெண் என்பதால் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதாகவும் நீதிபதி கௌரி கோட்சே தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெற்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: 48 மணி நேரத்தில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி

28 புதிய ரயில்களை வாங்க சென்னை மெட்ரோ நிர்வாகம் டெண்டர்..! எத்தனை கோடி மதிப்பு?

நள்ளிரவில் வீடு வீடாக சென்று உதவி செய்யுங்கள் என்ற கூச்சலிட்ட பெண்.. பொதுமக்கள் அச்சம்..!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் தேதி.. 10 மசோதாக்கள் நிறைவேற்ற திட்டம்..!

இன்று முதல் மக்கள் சந்திப்பு பயணத்தை மீண்டும் தொடங்கும் விஜய்! காஞ்சிபுரத்தில் முதல் நாள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments