ராமர் அயோத்திக்கு திரும்பியதை குறிக்கும் பிரமாண்டமான தீபோற்சவ திருவிழாவுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் முடிவடைந்துள்ளன. அக்டோபர் 18 முதல் 20 வரை மூன்று நாட்களுக்கு இந்த கொண்டாட்டம் நடைபெறுகிறது.
இந்த ஆண்டு, 26 லட்சம் அகல் விளக்குகளை சரயு நதி கரைகளில் ஏற்றி கின்னஸ் உலக சாதனை படைப்பதே இலக்கு என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீ அயோத்தி ஜி தீர்த்த விகாஸ் பரிஷத் டெண்டர்களை இறுதி செய்துள்ள நிலையில், தூய்மை பணிகள் மற்றும் அலங்காரங்களுக்கான ஏற்பாடுகளை மாநகராட்சி செய்து வருகிறது.
"இந்த இலக்கு கடந்த ஆண்டு சாதனையை முறியடிக்கும்" என்று அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். விழாவின் சிறப்பம்சமாக, ட்ரோன் ஷோ மற்றும் ஒளி-ஒலி நிகழ்ச்சிகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் ஆலோசனைக்கு ஏற்ப, இந்த தீபோற்சவம் 'திரேதா யுகத்தின் அயோத்தியை' நவீன தொழில்நுட்பத்துடன் மீண்டும் உருவாக்கும் என்று சுற்றுலா துறை அமைச்சர் ஜெயவீர் சிங் தெரிவித்தார். இந்த பிரமாண்டமான கொண்டாட்டத்தை காண பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் பெருமளவில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.