Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சுங்கச்சாவடிகளில் வருடாந்திர FASTag! ஆகஸ்டு 15 முதல்..! - மத்திய அமைச்சர் அறிவிப்பு!

Advertiesment
toll gate

Prasanth K

, புதன், 18 ஜூன் 2025 (14:48 IST)

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் அன்லிமிடெட்டாக பயணிக்கும் வகையில் புதிய வருடாந்திர பாஸ்டேக் வசதியை மத்திய அரசு அறிமுகப்படுத்துகிறது.

 

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் உள்ள நிலையில் அவற்றில் சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் மூலம் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. கார், வேன், லோடு வாகனங்கள் என வாகனங்களுக்கு தகுந்தாற்போல சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 

 

எப்போதாவது பயணிக்கும் வாகனங்கள் தவிர்த்து அடிக்கடி சுங்கச்சாவடிகள் வழியாக பயணிக்கும் வாகனங்களுக்கு பாஸ் முறை நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் பாஸ்டேக் முறையில் வருடாந்திர பாஸை அறிமுகம் செய்கிறது நெடுஞ்சாலை துறை.

 

ரூ.3000 கட்டணம் செலுத்தி ஆண்டு முழுவதும் அல்லது 200 பயணங்கள் வரை இந்த பாஸை கொண்டு பயணிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த பாஸ் முறை கார், வேன் போன்ற தனிநபர் பயன்பாட்டுக்கான வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும், சுற்றுலா வாகனங்கள், லோடு வாகனங்கள் பாஸ் பெற முடியாது எனவும் கூறப்படுகிறது. வரும் ஆகஸ்டு 15 முதல் இந்த பாஸ்டேக் முறை அமலுக்கு வர உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போபால் பாலத்திற்கு டஃப் கொடுக்கும் ஆந்திரா மேம்பாலம்.. எந்த ஊரு எஞ்சினியர் கட்டியது?