Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விபச்சார விடுதி நடத்திய பெண்ணுக்கு உதவி.. 2 காவலர்கள் சஸ்பெண்ட்..!

Mahendran
வியாழன், 24 ஜூலை 2025 (13:23 IST)
ஆந்திரப் பிரதேச மாநிலம் காக்கிநாடா மாவட்டம் பெத்தபுரம் பகுதியில் விபச்சார விடுதி நடத்தியதாக கூறப்படும் ஒரு பெண்ணுக்கு உதவியதாக, அந்த பகுதியை சேர்ந்த இரண்டு காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பெத்தபுரம் பகுதியில் பாரதி என்ற பெண் விபச்சார விடுதி நடத்தி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், பாரதிக்கு அவ்வப்போது உதவி செய்து வந்ததாக காவலர்கள் சிவராம கிருஷ்ணா மற்றும் சிவ கிருஷ்ணா ஆகிய இருவரும் மீது புகார் எழுந்தது. இது தொடர்பான விசாரணையில் அவர்கள் உதவி செய்தது உறுதி செய்யப்பட்டதையடுத்து, இரு காவலர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
விபச்சார விடுதி நடத்திய பாரதி என்ற பெண்ணை தற்போது காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தலைமறைவாக உள்ள அவர் விரைவில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
விபச்சார விடுதி நடத்திய பெண்ணை கைது செய்வதற்கு முன்பாக, அவருக்கு உதவியதாக கூறப்படும் இரண்டு காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனில் அம்பானி வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை.. என்ன காரணம்?

சோனியா காந்தி தலைமையில் திடீர் ஆர்ப்பாட்டம்.. ஸ்தம்பித்த நாடாளுமன்றம்..!

பனையூர் பார்ட்டிகள் கட்சியை விட்டு நீக்கப்படுவார்கள்?! - அன்புமணிக்கு ராமதாஸ் பகிரங்க எச்சரிக்கை!

முதல்வர் ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை.. அமைச்சர் துரைமுருகன் தகவல்..!

இல்லாத நாடுகளின் பெயரில் போலி தூதரகம்.. ஒருவர் கைது. ரூ.44 லட்சம் ரொக்கம் பறிமுதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments