Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுபானம் தர மறுத்த கடைக்கு தீ வைத்த மதுப்பிரியர்! – ஆந்திராவில் அதிர்ச்சி!

Webdunia
திங்கள், 13 நவம்பர் 2023 (09:48 IST)
மதுபானம் தர மறுத்த கடையை மதுப்பிரியர் ஒருவர் தீ வைத்து கொளுத்திய சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



ஆந்திர மாநிலம் மதுர்வாடா பகுதியில் மதுபானக்கடை ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. நேற்று முன் தினம் ஒருவர் அக்கடைக்கு சென்று மதுபானம் கேட்டுள்ளார். ஆனால் அது கடை மூடப்படும் நேரம் என்பதால் கடை ஊழியர்கள் மதுபானம் தர மறுத்துள்ளனர். இதனால் அந்த நபருக்கும், கடை ஊழியர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று கையில் பெட்ரோல், தீப்பெட்டி சகிதம் வந்த அந்த குடிகார ஆசாமி எதிர்பாராத வேளையில் கடையிலும், கடை ஊழியர்கள் மீதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். கடை ஊழியர்கள் பதறியடித்து தப்பி சென்ற நிலையில் கடை முழுவதுமாக எரிந்து சாம்பலாகியுள்ளது. இதுத்தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் சம்பந்தப்பட்ட ஆசாமியை கைது செய்துள்ளனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments