Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின் வேலியில் சிக்கி இளைஞர் பலி - உடலை கிணற்றில் வீசிய சம்பவத்தால் பரப்பரப்பு!

Webdunia
திங்கள், 13 நவம்பர் 2023 (09:19 IST)
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அழகுராஜா. தொட்டப்பநாயக்கணூரைச் சேர்ந்த உறவினரை பார்ப்பதற்காக தொட்டப்பநாயக்கணூர் கிராமத்தைச் சேர்ந்த தனிக்கொடி என்பவரது தொட்டத்தின் வழியாக வந்தாக கூறப்படுகிறது.


 
தனிக்கொடி தனது தோட்டத்தில் வனவிலக்குகளிலிருந்து பயிர்களை பாதுகாத்துக் கொள்ள சட்டவிரோதமாக மின் வேலி அமைந்திருந்த சூழலில், அவ்வழியாக வந்த உத்தப்புரம் கிராமத்தைச் சேர்ந்த அழகுராஜா என்பவர் மின் வேலியில் சிக்கி மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனிடையே சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின் வேலி மூலமாக பாதிப்பு ஏற்படும் என அஞ்சி உடலை அருகே உள்ள கிணற்றில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய போலிசார் கிணற்றிலிருந்து உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் 121 பேர் உயிரிழந்த விவகாரம்.. 2 பெண்கள் உட்பட 6 பேர் கைது..!

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 43-வது முறையாக நீட்டிப்பு.!

ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவியேற்கிறார் ஹேமந்த் சோரன்.. ஆளுநர் அழைப்பு..!

பிரதமர் மோடி ரஷ்யா, ஆஸ்திரியா நாடுகளுக்கு பயணம் பயணம்.. புதின் உடன் முக்கிய பேச்சுவார்த்தை..!

அரசு நலத்திட்டங்கள் சரிவர கிடைக்கிறதா.? பயனாளிகளுடன் ஸ்டாலின் கலந்துரையாடல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments