Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சாலையில் சென்ற ஆம்புலன்ஸ் வெடித்து சிதறியதால் நோயாளி பலி.. அதிர்ச்சி சம்பவம்..

சாலையில் சென்ற ஆம்புலன்ஸ் வெடித்து சிதறியதால் நோயாளி பலி.. அதிர்ச்சி சம்பவம்..
, வியாழன், 2 நவம்பர் 2023 (13:59 IST)
மும்பை - புனே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் திடீரென வெடித்து சிதறியதால் அந்த ஆம்புலன்ஸில் இருந்த நோயாளி பலியான சோகமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மும்பை - புனே விரைவு சாலையில் ஆம்புலன்ஸ் ஒன்று நோயாளியை ஏற்றிக்கொண்டு மருத்துவமனை நோக்கி சென்று கொண்டிருந்தது. ஆம்புலன்ஸில் 74 வயதான நோயாளி இருந்ததாகவும் அவருக்கு ஆக்சிஜன் அளிக்கப்பட்டு கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஆம்புலன்ஸில் உள்ள ஆக்ஸிஜன் சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியதால் ஆம்புலன்ஸில் இருந்த நோயாளி பலியானதாக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் ஆம்புலன்ஸில் பயணம் செய்த ஏழு பேர் உயிர் தப்பியதாகவும் கூறப்பட்டுள்ளது.

மின்கசிவு காரணமாக தான் ஆம்புலன்ஸில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்ததாக முதல் கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜார்க்கண்டில் தமிழக மருத்துவ மாணவரின் பாதி எரிந்த உடல்.. அதிர்ச்சி தகவல்..!