Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்பேத்கர் சிலை உடைப்பு.. மக்கள் கொந்தளிப்பு

Arun Prasath
புதன், 9 அக்டோபர் 2019 (16:20 IST)
உத்தரபிரதேசத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

கடந்த 60 வருடங்களாக சாதி வெறி கும்பலால் இந்தியா முழுவதும் அம்பேதகர் சிலைகள் உடைக்கப்பட்டு வருகின்றன. அம்பேத்கர் பட்டியலின ஜாதிகளின் தலைவர் என போலியான பிம்பம் சமூகத்தில் இருப்பதால், பட்டியலின மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மோதல் வரும்போது, அம்பேத்கர் சிலைகள் தாக்கப்படுகின்றன.

இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலம், முசாஃபர்நகர் மாவட்டத்தில் உள்ள அமைந்துள்ள திகை என்னும் கிராமத்தில், அம்பேத்கர் சிலை ஒன்று சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்ததாகவும், பின்பு சிலை சரிசெய்யப்பட்டதாகவும் தெரியவருகிறது. மேலும் சிலையை உடைத்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதற்கு அப்பகுதியில் உள்ள தலித் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே போதை ஊசியை பயன்படுத்திய 10 பேருக்கு எச்.ஐ.வி.. சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்..!

இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா.. தேதி அறிவித்த முதல்வர் ஸ்டாலின்..!

உதயநிதிக்கு உடல்நலமில்லை.. மகனுக்காக மானிய கோரிக்கையை முன்வைத்த முதல்வர்..!

ஆன்லைன் சூதாட்ட வழக்கு.. 15 மாதங்களாக விசாரணைக்கு வராமல் தடுக்கும் சக்தி எது? ராமதாஸ்

சென்னைக்கு வருகிறது ரஷ்ய போர்க்கப்பல்.. கூட்டு பயிற்சி பெற திட்டம் என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments