Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமர்நாத் யாத்திரை தொடங்குவது எப்போது? ஆலய வாரிய கூட்டத்தில் அறிவிப்பு..!

Siva
வியாழன், 6 மார்ச் 2025 (08:16 IST)
ஒவ்வொரு ஆண்டும் அமர்நாத் யாத்திரை தொடங்கும் முன், ஆலய நிர்வாக குழு கூட்டம் நடத்தப்பட்டு, யாத்திரை ஆரம்பிக்கும் தேதி அறிவிக்கப்படும். அந்த அமைப்பில், இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை நடைபெறும் தேதி தொடர்பான அறிவிப்பு சில நேரம் முன்பு வெளியிடப்பட்டது.
 
இதன்படி, இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை ஜூலை 3ஆம் தேதி தொடங்குகிறது. அனந்த்நாக் மாவட்டத்தின் பாகல்காம் பாதை மற்றும் கண்டர்பால் மாவட்டத்தின் பல்டால் பாதை ஆகிய இரு வழிகளிலும் ஒரே நேரத்தில் யாத்திரை ஆரம்பமாகி, ஆகஸ்ட் 9ஆம் தேதி, ரக்ஷாபந்தன் தினத்தில் யாத்திரை நிறைவடையும்.
 
யாத்திரையில் பங்கேற்கும் பக்தர்களுக்கான வசதிகள் மற்றும் சேவைகளை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும். பக்தர்கள் அதிக அளவில் வருகை புரிவதை கருத்தில் கொண்டு, பல்டால், பாகல்காம், நுன்வான் மற்றும் பந்தசவுக் ஆகிய இடங்களிலும் ஸ்ரீநகரிலும் வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த ஆண்டு, ஜூன் 29ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 19ஆம் தேதி வரை நடைபெற்ற புனித யாத்திரையில், 5.10 லட்சம் யாத்திரிகர்கள் பனியில் உருவான சிவலிங்கத்தை தரிசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments