Webdunia - Bharat's app for daily news and videos

Install App

36 நிமிடங்களில் கேதார்நாத் பயணம்: புதிய ரோப் கார் திட்டத்திற்க்கு அனுமதி..!

Mahendran
புதன், 5 மார்ச் 2025 (19:20 IST)
கேதார்நாத் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் நிலையில், ரூ. 4,000 கோடி செலவில் ரோப் கார் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
 
கேதார்நாத் யாத்திரைக்கு இதுவரை பக்தர்கள் 9 மணி நேரம் பயணம் செய்த நிலையில், இந்த புதிய திட்டத்தால் வெறும் 36 நிமிடங்களில் பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இதுகுறித்து கூறிய போது, "பர்வத்மாலா பரியோஜனா" என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இந்த ரோப் கார் திட்டத்துக்கு அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்தார்.
 
இதற்கான மொத்த செலவு ₹6,800 கோடிக்கு மேல் இருக்கும். முதற்கட்டமாக, ₹4,000 கோடி செலவில் பணிகள் தொடங்கப்படும்.
 
தற்போது, இந்த தொலைவை கடக்க பக்தர்களுக்கு 8 முதல் 9 மணி நேரம் ஆகிறது. ஆனால், ரோப் கார் அமைக்கப்பட்டால் வெறும் 36 நிமிடங்களில் பயணம் முடிக்கலாம்.
 
இந்த திட்டம் ஆஸ்திரியா மற்றும் பிரான்ஸ் நிபுணர்களின் உதவியுடன் கட்டி முடிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மத்திய அரசு என்னும் மதயானையின் அங்குசம்? மாநிலக் கல்விக் கொள்கை வெளியிட்டார் முதல்வர்!

பெண்களின் அந்தரங்க தகவல்களை விற்ற Meta! உடன் சிக்கிய Google?

ரோந்து பணிகளுக்கு தனியாக செல்ல வேண்டாம்: காவல்துறையினர்களுக்கு அதிகாரிகள் உத்தரவு..!

இந்தியாவுடன் பல ஆண்டுகள் கட்டமைத்த உறவு பாதிப்படைய வாய்ப்பு; டிரம்ப்பை எச்சரிக்கும் அமெரிக்க செனட்டர்

காலம் மாறும்.. அப்போ உங்களுக்கு தண்டனை நிச்சயம்! - தேர்தல் அதிகாரிகளுக்கு ராகுல் எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments