Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஏர் இந்தியாவை டாடாவிடம் ஒப்படைப்பது எப்போது?

ஏர் இந்தியாவை டாடாவிடம் ஒப்படைப்பது எப்போது?
, திங்கள், 24 ஜனவரி 2022 (18:16 IST)
இந்திய அரசின் நிறுவனமான ஏர் இந்தியாவை 18 ஆயிரம் கோடி கொடுத்து டாட்டா குழுமம் விலைக்கு வாங்கி உள்ள நிலையில் ஏர் இந்தியாவை டாடாவிடம் ஒப்படைப்பது எப்போது என்ற தகவல் தற்போது தெரியவந்துள்ளது
 
அடுத்த வார இறுதியில் ஏர் இந்தியா முழுமையாக டாட்டா குழுமம் இடம் ஒப்படைக்கப்படும் என்றும் அதன்பின் ஏர் இந்தியாவின் முழு நிர்வாகமும் டாட்டா குழுமத்தின் கீழ் வந்து விடும் என்றும் கூறப்படுகிறது
 
இந்திய அரசின் ஏர் இந்தியா நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக நஷ்டத்தில் இருந்து வந்த நிலையில் அந்த நிறுவனத்தையே டாட்டா குழுமம் 18 ஆயிரம் கோடி கொடுத்து விலைக்கு வாங்கியது 
 
மேலும் ஏர் இந்தியா நிறுவனத்தில் உள்ள தொழிலாளர்கள் பணி குறித்து பேச்சுவார்த்தை நடந்த நிலையில் தற்போது அடுத்த வார இறுதியில் முழுமையாக ஏர் இந்தியாவை டாடா நிறுவனத்திடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று ஒரே நாளில் 1500 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்! கொரோனா பரவல் காரணமா?