Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டு நாள் இறக்கத்திற்கு பின் சற்றே ஏறிய இன்றைய பங்கு சந்தை!

Webdunia
செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (14:11 IST)
கடந்த இரண்டு நாட்களாக பங்குச் சந்தை இறக்கத்தில் இருந்த நிலையில் இன்று பங்கு சந்தை சற்று ஏற்றத்துடன் தொடங்கி உள்ளதால் முதலீட்டாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர் 
 
இன்று காலை தொடங்கிய பங்குச்சந்தை சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய இரண்டுமே சற்றே ஏற்றத்துடன் உள்ளது. மேலும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூபாய் 73.50 ஆக சரிவடைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்றைய பங்குச் சந்தையில் பிபிசிஎல், இன்போசிஸ், விப்ரோ, ரிலையன்ஸ், டிசிஎஸ் ஆகிய பங்குகள் ஏற்றத்துடன் உள்ளன. அதே போல் பாரதிஇன்ஃப்ராடெல், ஜீ எண்டர்டெயின்மெண்ட், கிரசிம், பார்தி ஏர்டெல், ஒ.என்.ஜி.சி ஆகியவை இறக்கத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
கடந்த சில வாரங்களாக பங்குச்சந்தை தொடர்ச்சியாக ஏற்றத்தில் இருந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக திடீரென பங்குச் சந்தை இறக்கத்தில் இருப்பது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

பாஜகவுக்கு எதிராக பேசினால் கைது நடவடிக்கை.! அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு..!!

சமூகத்தை பிளவுபடுத்தும் பிரச்சாரத்தை நிறுத்துங்கள்.! பாஜக - காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்..!!

அரசுப் பேருந்துகளில் காவலர்களுக்கு இலவசப் பயணம்..! நடைமுறைப்படுத்த அண்ணாமலை வலியுறுத்தல்..!

பாஜக ஆட்சியில் மிகப் பெரிய ஊழல்.! ஆட்சிக்கு வந்ததும் விசாரிப்போம்..! ராகுல் காந்தி..!!

சவுக்கு சங்கருக்கு காவல் நீட்டிப்பு..! போலீசார் துன்புறுத்தவில்லை என வாக்குமூலம்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments