Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைன் மூலமாக இறுதி ஆண்டு தேர்வுகள்! – உயர்கல்வித்துறை திட்டம்!

Webdunia
செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (13:51 IST)
தமிழக பல்கலைகழக இறுதி ஆண்டு தேர்வுகளை ஆன்லைன் மூலமாக நடத்த உயர்கல்வித்துறை திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் காரணமாக கல்லூரிகளில் இறுதி ஆண்டு தேர்வு தவிர மற்ற செமஸ்டர் மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இறுதியாண்டு தேர்வுகள் நடத்தப்படாமல் இருப்பதால் மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் இறுதி ஆண்டுகளை தேர்வுகளை உடனடியாக நடத்த தமிழக உயர்கல்வி துறை திட்டமிட்ட நிலையில் செப்டம்பர் 15 முதல் இறுதியாண்டு தேர்வுகளை நடத்த பல்கலைகழகங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தமிழகத்திற்குள் உள்ள மாணவர்களுக்கு நேரடியாக எழுத்து தேர்வு நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது அனைவருக்கும் ஆன்லைன் வழியாக தேர்வுகள் நடத்த உயர்கல்வி துறை பல்கலைகழகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments