Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டெல்லி, பஞ்சாபை அடுத்து ஆம் ஆத்மி குறிவைத்துள்ள அடுத்த மாநிலம்

டெல்லி, பஞ்சாபை அடுத்து ஆம் ஆத்மி குறிவைத்துள்ள அடுத்த மாநிலம்
, சனி, 12 மார்ச் 2022 (17:57 IST)
டெல்லி, பஞ்சாபை அடுத்து ஆம் ஆத்மி இன்னொரு மாநிலத்துக்கு குறி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளை வீழ்த்தி டெல்லியில் ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மி சமீபத்தில் நடந்த தேர்தலில் பஞ்சாப் மாநிலத்திலும் ஆட்சியை பிடித்தது
 
இதனை அடுத்து ஆம் ஆத்மியின் இமாச்சல பிரதேச மாநிலத்தையும் குறி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பஞ்சாப் வெற்றியை அடுத்து இமாச்சல பிரதேசத்தில் கால்பதிக்க ஆம் ஆத்மி கட்சியை தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறது 
 
அடுத்த மாதம் இமாச்சல மாநிலத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருப்பதாகவும் இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது
 
மேலும் வரும் நவம்பர் மாதம் இமாச்சல பிரதேசத்தில் சட்டப் பேரவை தேர்தலும் நடைபெற உள்ளதை அடுத்து உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று அந்த மாநிலத்தின் ஆட்சியையும் பிடிக்க ஆம் ஆத்மி  திட்டமிட்டுள்ளது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செல்போன் கடை உரிமையாளர் வீட்டில் நகை, பணம் திருட்டு