Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

4 மாநிலங்களில் மீண்டும் பாஜக....தனித்து சாதித்த ஆம் ஆத்மி !

4    மாநிலங்களில்  மீண்டும் பாஜக....தனித்து சாதித்த ஆம் ஆத்மி !
, வியாழன், 10 மார்ச் 2022 (18:07 IST)
ஐந்து மாநில தேர்தல் நிலவரம் இன்று வெளியாகி வரும் நிலையில் பாஜக 4  மாநிலங்களில் முன்னிலையிலும் ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப்பில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

கடந்த ஆண்டு முதல் இந்தியா முழுவதிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது,  உத்தரபிரதேசம்,  உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் நடைபபெற இருந்த சட்டப்பேரவைத் தேர்தல்.

மத்தியில் ஆட்சியிலுள்ள பாஜக தான் உத்தரபிரதேசத்திலும் உத்தராகண்டிலும், மணிப்பூரிலும் கோவாவிலும் ஆட்சியில் இருந்தது. இதனால் பாஜக வை  வீழ்ந்த காங்கிரஸ் , சமாத்வாதி , ஆம் ஆத்மி, திரினாமுள்  உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் ஐந்து மா நில தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிவருகிறது. இதில், உத்தரபிரதேசத்தில் பாஜக 260, சமாஜ்வாடி 136  இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
webdunia

பஞ்சாப் மாநிலத்தில் 117 தொகுதிகளில்  ஆம் ஆத்மி 85 இடங்களில்  வெற்றி பெற்று  பெரும்பான்மைக்கும் அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது 7 இடங்களில் முன்னிலை வகிக்கிறது, காங்கிரஸ் 25  இடங்களிலும்   முன்னிலை வகிக்கிறது.

உத்தரகாண்டில் பாஜக 48 இடங்களிலும் காங்கிரஸ் 18 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

கோவாவில் பாஜக 20 இடங்களிலும் காங்கிரஸ் 12 இடங்களிலும் முன்னலை வகிக்கிறது.

மணிப்பூரில் பாஜக 27 இடங்களிலும் காங்கிரஸ் 06 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

இதனால் இந்தியாவில் பாஜக ஆளும்  மாநிலங்களின் எண்ணிக்கை 28 ஆக அதிகரிக்கும் என தெரிகிறது.

ஐந்து மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியைச் சந்தித்துள்ள நிலையில் எங்கு சரிந்தது என்பது குறித்த காரியக் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செருப்பால் அடித்து விரட்டப்பட்ட வேட்பாளர் இந்தியாவிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி!