Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூரியனை நெருங்கும் ஆதித்யா எல்-1; இறுதி சுற்றுவட்டப்பாதையில்..! – இஸ்ரோ தகவல்!

Webdunia
வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (09:29 IST)
சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றிகரமாக 4வது சுற்றுவட்டப்பாதைக்கு உயர்த்தப்பட்டுள்ளது.



சந்திரயான் திட்டம் மூலம் சந்திரனில் கால்பதித்த இஸ்ரோ அடுத்ததாக சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா திட்டத்தில் இறங்கியுள்ளது. இந்த திட்டத்தின் முதல் விண்கலமான ஆதித்யா எல்-1 கடந்த செப்டம்பர் 2ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. பூமியை 4 சுற்றுவட்டப்பாதைகளில் சுற்றி விரிவடைந்து சூரியனுக்கும், பூமிக்கும் இடையேயான எல்-1 பகுதியில் இந்த விண்கலம் நிலைநிறுத்தப்படும்.

இதற்கான சுற்றுவட்டப்பாதை உயர்த்துதலில் 4வது சுற்றுவட்டப்பாதைக்கு ஆதித்யா எல்-1 வெற்றிகரமாக உயர்த்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. அடுத்த கட்டமாக பூமியின் சுற்றுவட்டப்பாதையிலிருந்து ஆதித்யா எல்-1 விலகி லக்ராஜியன் புள்ளி ஒன்றிற்கு அனுப்பப்படும் பணிகள் அக்டோபர் 19ம் தேதி தொடங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா சட்டமன்ற எம்.எல்.ஏக்கள் அடிதடி சண்டை.. சட்டமன்றத்திற்கு குண்டர்கள் வந்தார்களா?

கோபாலபுரம் இல்லத்தில் மு.க.முத்து உடல்; துணை முதல்வர் உதயநிதி அஞ்சலி..!

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments