Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய 'செக்க சிவந்த வானம்' பட நடிகை

Webdunia
வெள்ளி, 8 மார்ச் 2019 (09:00 IST)
தேர்தல் காலங்களில் ஒரு கட்சியில் இருந்து விலகி இன்னொரு கட்சியில் சேருவது வாடிக்கையாகி வரும் நிலையில் ''செக்க சிவந்த வானம்' படத்தில் அம்மா வேடத்தில் நடித்த நடிகை ஜெயசுதா, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
 
செகந்திராபாத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த ஜெயசுதா நேற்று திடீரென ஐதராபாத் பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு சென்று அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து அவரது கட்சியில் தன்னை இணைத்து கொண்டார். 
 
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயசுதா, 'நடைபெற இருக்கும் தேர்தலில் போட்டியிடுவது பற்றி திட்டம் எதுவும் இல்லை என்றும், தலைவர்களுடன் இணைந்து கட்சி பணியாற்றுவேன் என்றும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வெற்றி பெற பிரச்சாரம் செய்வேன் என்றும் கூறினார். 
 
இருப்பினும் ஜெயசுதாவை முக்கிய தலைவர் ஒருவரை எதிர்த்து போட்டியிட வைக்க ஜெகன்மோகன் ரெட்டி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments