Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய 'செக்க சிவந்த வானம்' பட நடிகை

Webdunia
வெள்ளி, 8 மார்ச் 2019 (09:00 IST)
தேர்தல் காலங்களில் ஒரு கட்சியில் இருந்து விலகி இன்னொரு கட்சியில் சேருவது வாடிக்கையாகி வரும் நிலையில் ''செக்க சிவந்த வானம்' படத்தில் அம்மா வேடத்தில் நடித்த நடிகை ஜெயசுதா, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
 
செகந்திராபாத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த ஜெயசுதா நேற்று திடீரென ஐதராபாத் பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு சென்று அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து அவரது கட்சியில் தன்னை இணைத்து கொண்டார். 
 
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயசுதா, 'நடைபெற இருக்கும் தேர்தலில் போட்டியிடுவது பற்றி திட்டம் எதுவும் இல்லை என்றும், தலைவர்களுடன் இணைந்து கட்சி பணியாற்றுவேன் என்றும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வெற்றி பெற பிரச்சாரம் செய்வேன் என்றும் கூறினார். 
 
இருப்பினும் ஜெயசுதாவை முக்கிய தலைவர் ஒருவரை எதிர்த்து போட்டியிட வைக்க ஜெகன்மோகன் ரெட்டி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆப்பிள் ஸ்டோரை சூறையாடிய போராட்டக்காரர்கள்.. லாஸ் ஏஞ்சல்ஸில் போராட்டம் என்ற பெயரில் வன்முறை..!

டெல்லி சிறப்பாக செயல்படுகிறது.. இனி டெல்லியை நாங்கள் பின்பற்றுவோம்: துணை முதல்வர் டிகே சிவகுமார்

சட்டவிரோதமாக நுழைந்தால் பொறுத்துக் கொள்ள மாட்டோம்! - இந்தியர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை.. குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்..!

மனுஷங்க ஒட்டு கேக்குறாங்க..! திடீரென ரகசிய பாஷையில் பேசிக் கொண்ட AI Models! - அதிர்ச்சியில் டெவலப்பர்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments