Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கம் கடத்துபவர்களின் புது டெக்னிக்.. விமான நிலையங்களுக்கு சுங்கத்துறை எச்சரிக்கை..!

Mahendran
வியாழன், 19 செப்டம்பர் 2024 (15:48 IST)
சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு சுங்கத் துறை முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதில் பயணிகளால் நிரம்பிய விமானங்களில், சிலர் திடீரென உடல் நல பாதிப்பில் சிக்குவது, பொதுவாக தங்கக் கடத்தல் கும்பலின் வித்தியாசமான உத்தியாக இருக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ளது. இந்த விஷயத்தில் சுங்கத் துறை மிக கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டெல்லி தலைமை அலுவலகத்திலிருந்து, சென்னை, திருச்சி, கொச்சி மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அறிவுறுத்தலில், புதிய தந்திரம் குறித்து சொல்லப்பட்டுள்ளது. குறைந்த அளவிலான தங்கத்தை அதிகமான பயணிகள் கொண்டு வருவதும், விமானத்தில் ஒருவர் திடீரென உடல் நலம் குன்றியதாக நடிப்பதும் அல்லது விமான நிலையத்தில் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும் மற்ற பயணிகளுக்கு சுலபமாக தப்பிச் செல்ல உதவியாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

சிறிய அளவிலான கடத்தல்களில் சிக்கியவர்கள் மீது முழு கவனம் செலுத்தப்படும் போது, பெரிய அளவிலான கடத்தல்களில் பலர் தப்பிச் செல்ல வாய்ப்பிருப்பதாகவும் சுங்கத் துறை எச்சரித்துள்ளது

ஆகவே, அடிக்கடி பயணம் செய்யும் பயணிகள்  அவர்களை தனிப்பட்ட முறையில் சோதிக்க வேண்டும் என்றும், சாதாரண பயணிகளுக்குத் தங்கத்தை கடத்த கொடுத்து, அதனைப் பின்னர் கமிஷனுடன் திருப்பிப் பெறும் குழுக்கள் செயல்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதி துணை முதல்வரானால் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்? - ஆர்.பி.உதயக்குமார்!

எந்த பிராண்ட் மதுபானங்களும் வெறும் ரூ.99 தான்.! ஆந்திர அரசு அதிரடி - உற்சாகத்தில் மதுப்பிரியர்கள்.!!

உணவகத்திற்கு சத்துணவு முட்டைகள் விற்பனை- சத்துணவு திட்ட அமைப்பாளர் வசந்தகுமாரி சஸ்பெண்ட்.!!

பெரியாரின் நெஞ்சில் ஈட்டியை குத்தியிருக்கிறது திமுக அரசு! டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு..!

கடன் தொல்லை.. 3 மகன்களுக்கு விஷம் கொடுத்த தாய்.. தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments