Publish Date: Mon, 11 Dec 2017 (14:55 IST)
Updated Date: Mon, 11 Dec 2017 (16:30 IST)
ஜனவரி 1 ஆம் தேதி முதல் திருப்பதி கோவிலில் விஐபி தரிசனத்திற்கு அதார் அட்டை கட்டாயம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள திருப்பதி கோவில் மிகவும் பிரசக்தி பெற்ற கோவிலாகும். இக்கோவிலுக்கு உலகில் பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வருவது வழக்கம். சுவாமி தரிசனத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்காமல் இருக்க பக்தர்கள் விஐபி டிக்கட் பெற்றுக்கொண்டு மூலஸ்தலத்திற்கு செல்வார்கள். இதுவரை விஐபி தரிசன டிக்கெட்டை பெறுவதற்கு வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், அல்லது குடும்ப அட்டை இருந்தால் போதும்.
ஆனால் வரும் ஜனவரி 1 முதல் விஐபி தரிசனம் செய்யும் பக்தர்கள் தங்களின் கையில் ஆதார் அட்டையை கட்டாயமாக வைத்திருக்க வேண்டும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த புதிய நிபந்தனையால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.