Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹைதராபாத்தில் சிக்கிய மகன்; ஸ்கூட்டரில் சென்று மீட்ட தாய்! – தெலுங்கானாவில் ஆச்சர்ய சம்பவம்!

Webdunia
வெள்ளி, 10 ஏப்ரல் 2020 (10:35 IST)
நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் ஹைதராபாத்தில் சிக்கி கொண்ட தன் மகனை மீட்க தாய் ஒருவர் 1400 கிமீ ஸ்கூட்டரில் சென்ற சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் சொந்த ஊர்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு படிப்பதற்காக, வேலைக்காக சென்றவர்கள் திரும்ப வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

மக்கள் பலர் நடைப்பயணமாக சொந்த ஊர்களுக்கு புறப்பட தொடங்கியுள்ளனர். இதனால் பலர் நடந்து செல்லும் வழியிலேயே நோய்வாய்ப்பட்டு இறப்பது உள்ளிட்ட வேதனையான சம்பவங்களும் தொடர்ந்து வருகின்றன.

இந்நிலையில் மருத்துவ படிப்புக்காக ஹைதராபாத் சென்ற தன் மகனை மீட்க ஸ்கூட்டரிலேயே பயணம் மேற்கொண்டுள்ளார் ரஜியா பேகம் என்ற வீரத்தாய். தெலுங்கானாவின் நிஜாமாபாத் பகுதியில் உள்ள பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார் ரஜியா பேகம். தன் மகன் ஹைதராபாத்தில் சிக்கி கொண்டதை அறிந்ததும், காவல் துறையிடம் தேவையான அனுமதியை பெற்ற ரஜியா பேகம், தனது ஸ்கூட்டரிலேயே 1400 கிமீ பயணம் செய்துள்ளார். பல கிலோ மீட்டர் தூரம் கடந்து சென்று மகனை பத்திரமாக மீட்டு வந்த அவரது வீர செயலை பலரும் போற்றி புகழ்ந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

முதல்முறையாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து..!

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments